Ads (728x90)

எதிர்வரும் 26 ஆம் திகதி இந்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு கைளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

 ஜனவரி மாத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடுக்கான அனுமதி கிடைக்காவிட்டால் நிதியினை செலவு செய்ய முடியாது.

இது சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைப் பிரிவுகளுக்கு அது பாரிய பிரச்சினை ஏற்படுத்தும். அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளிலும் பிரச்சினை ஏற்படும். எனவே எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் அமைச்சரவையை தெரிவு செய்வதுடன் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget