பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்கின்றார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடவும், மக்களுக்கு நிவாரணங்களைப் தொடர்பில் ஆராய்வதற்குமாக பிரதமர் அங்கு விஜயம் செய்கின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பிற்பகல் 1.00 மணிக்கு விஜயம் செய்யும் பிரதமர் அங்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம் பெறும் விசேட மாநாட்டிலும் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment