Ads (728x90)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக்கணக்கொன்றிலிருந்து சுமார் 04 கோடி ரூபா பணம் பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவரால் கடந்த 06 வருடங்களில் அவ்வப்போது மோசடியாக பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

பிரதமரின் குறித்த வங்கிக்கணக்கின் தானியக்க பணப்பரிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

பண மோசடி தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து குறித்த நபர் பிரதமர் அலுவலகம் தொடர்பில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget