Ads (728x90)

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் புதிய சுற்று நிரூபம் பொதுநிர்வாக அமைச்சினால்  வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் இந்த சுற்று நிரூபம் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய ஓய்வூதிய சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget