Ads (728x90)

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திரவ ஒட்சிசன் தாங்கி நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. சுகாதார அமைச்சினால் 24 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்டதாக இத்தாங்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிஜன் குழாய் வழி மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை இதனை மீள்நிரப்பினால் போதுமானதாக இருக்கும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீபவனாந்தராஜா தெரிவித்தார்..

இத்திரவ ஒட்சிசன் தாங்கி  யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சிறீபவானந்தராஜா மற்றும் யமுனாநந்தா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.





Post a Comment

Recent News

Recent Posts Widget