Ads (728x90)

ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய மூன்று அரச கட்டிடங்களையும் போராட்டக்காரர்கள் முழுமையாக மீள கையளித்துள்ளனர்.

இதனை நேற்று வியாழக்கிழமை காலி முகத்திடல் கோட்டா கோ கமவில் விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தி போராட்டத்துடன் தொடர்புடைய செயற்பட்டாளர்கள் அறிவித்ததுடன் குறித்த மூன்று அரச கட்டிடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறியுள்ளனர்.

எனினும் கைப்பற்றப்பட்ட பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியான  தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் கடைமைகளுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படா வண்ணம் அதனை தமது பொறுப்பில் தொடர்ந்து வைத்திருக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஆட்சியாளர்களுக்கு தொடர்ச்சியாக போராட்டக்களத்திலிருந்து ஒரு வலுவான அரசியல் செய்தியை வழங்கும் முகமாக செயலகத்தினை தொடர்ந்து தமது பொறுப்பில் வைத்திருக்க தீர்மானித்ததாகவும், மக்களின் கோரிக்கைகளை வெல்லும் வரை தொடர்ச்சியாக அப்பகுதியில் இருந்து போராட்டத்தை தொடரப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

ஜனாதிபதி செயலக நடவடிக்கைகள் பெரும்பாலும் கட்டிடத்தின் பின்னால் அமைந்துள்ள பகுதியிலேயே இடம்பெறுகின்றது. எனவே நாம் செயலகத்தின் முன் பகுதியை தொடர்ந்து எமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அமைதிப் போராட்டத்தை தொடரவுள்ளோம்.

இதனூடாக புதிய பாராளுமன்றத்துக்கு நாம் பலமான அரசியல் செய்தியை தொடர்ச்சியாக வழங்கவுள்ளோம் என போராட்டக்காரர்கள் சார்பில்  ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் குறிப்பிட்டார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget