சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் நடத்திய பல சுற்று பேச்சுக்களின் விளைவாக இந்த கடன் வழங்கப்பட உள்ளது. இக்கடனுதவி இலங்கைக்கு 48 மாதங்களில் தவணை முறையில் வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை சாத்தியமாகியுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் இலங்கை கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்குள் 2.3 சதவீத முதன்மை அபிவிருத்தியை அடைவதே இதன் முதன்மையான நோக்கமாகும் என்றும் அது தெரிவித்துள்ளது.
Post a Comment