Ads (728x90)

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலிருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். 

பண்டத்தரிப்பு பிரதேச சபைக்கு சொந்தமான காடாப்புலம் காணி 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

அங்கிருந்து வெளியேறிய இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த காணியானது பிரதேச செயலாளரிடம் இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த வாரம் சுழிபுரம் பகுதியில் இருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையில் உள்ள இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget