இம்மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு இவ்வழக்கு தொடர்பான அறிவித்தல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கமைய குறித்த மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கு அறிவித்தல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்குப் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை சுற்றுச்சூழல் வழக்கறிஞர் டாக்டர் ரவீந்திரநாத் தாபரே தாக்கல் செய்துள்ளார்.

Post a Comment