Ads (728x90)

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்களாயின், பேருந்து உரிமையாளர்களின் வாகன அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளை சேவையில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, அதிகளவான பேருந்து சாரதிகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியமை தெரியவந்ததை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget