கண் பார்வை பிரச்சினை உள்ளவர்கள் கேரட்டை அடிக்கடி சாப்பிடுவதால் கண் பார்வை அதிகரிக்கும்.
வைட்டமின் “ஏ” சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோய் குணமாகும்.
வைட்டமின் ”ஏ” சத்து குறைபாட்டினால் சருமத்தில் ஏற்படும் வறட்சியிலிருந்து சருமத்தை பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தருகிறது.
கேரட்டுடன் ஏலக்காயை பொடி செய்து பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
கேரட்டை எலுமிச்சை சாற்றுடன் பாலில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால் இன்சுலின் அதிகமாக சுரக்கும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறவர்கள் தினமும் கேரட் சாப்பிட வேண்டும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. உடல் எடையை குறைத்து மெலிவான தோற்றத்தை தருகிறது.
Post a Comment