Ads (728x90)

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கு பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் திகதி வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த 40 வயதுக்குட்பட்டவர்கள் தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாகின்றனர். 

இதற்கு முன்னர் வெளியான வர்த்தமானியில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி முதல், 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget