Ads (728x90)

இந்தியாவை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பராகவும், பங்குதாரராகவும் தான் கருதுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ட்ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இந்தியா தொடர்பான தமது கட்சியின் பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ட்ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் ஆரம்ப காலத்தில் 'இந்திய விரிவாக்கக் கொள்கை' குறித்து ரோஹண விஜேவீர கொண்டிருந்த கடுமையான கருத்துக்கள், ட்ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்துக்குப் பின்னர் மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget