Ads (728x90)

புதிய தேசிய கனிமக் கொள்கை முறைப்படி அறிமுகப்படுத்தப்படும் வரை, நாட்டில் கனமான கனிமங்களை அகழ்வதற்கான அனைத்து வகையான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்தார்.

புதிய தேசிய கனிமக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று, அது நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் வரை இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இல்மனைட், ரூட்டைல், சிர்கான் மற்றும் கார்னட் போன்ற பெறுமதிமிக்க கனமான கனிம வகைகளுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget