Ads (728x90)

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய கைநூல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget