இலங்கை போக்குவரத்துச் சபையின் வரலாற்றிலேயே ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி பதிவாகியுள்ளது.
அன்று ஒரு நாளில் மாத்திரம் 213 மில்லியன் ரூபா வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகச் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பயணிகளின் நலன் கருதி மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தியதன் மூலமே இந்த மைல்கல்லை எட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment