Ads (728x90)

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் நடப்பு சம்பியனான நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சவுதாம்ப்டனில் அமைந்துள்ள 'தி ரோஸ் போல்' மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 151 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget