Ads (728x90)


பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையில், பொதுமக்களின் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘பொலிஸ் மா அதிபரிடம் சொல்லுங்கள்’ (Tell IGP) செயற்றிட்டம் குறித்துப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இச்செயற்றிட்டம் 2026ஆம் ஆண்டில் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. 

இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் எவரும், தமிழ், சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும். 

இம்முறைப்பாடுகளை இணைய வழி மூலமாகவே சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பொதுமக்கள் பின்வரும் விடயங்கள் குறித்துப் பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாகத் தகவல்களை வழங்க முடியும்: 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்கள். 

குற்றச் செயல்கள், பொதுப் பீடைகள் (Public nuisance) மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள். 

வாகனப் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய பல்வேறு முறைப்பாடுகள். 

முறைப்பாடுகளை http://www.police.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று, அதில் உள்ள ‘E-Service’ பிரிவின் கீழ் உள்ள ‘Tell Inspector General Of Police’ என்ற இணைப்பை http://(https://telligp.police.lk) பயன்படுத்தலாம். 

மின்னஞ்சல்: http://telligp@police.gov.lkஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்பலாம். 

சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை முறைப்பாட்டிற்கு நீதியான தீர்வு கிடைக்கவில்லை எனின், மீண்டும் அதே முறைமை ஊடாகப் பொலிஸ் மா அதிபருக்குத் தெரியப்படுத்தும் வசதியும் உண்டு. 

இத்திட்டத்தின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக, நாட்டின் 48 பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் கணினி இயக்குநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுச் சேவை விரிவாக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் நலன் கருதிச் செயல்படுத்தப்படும் இந்தச் சேவை குறித்துப் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொள்கிறது



Post a Comment

Recent News

Recent Posts Widget