Ads (728x90)

1983 ஆண்டு இனக்கலவர வன்முறையின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் நினைவுகூரப்பட்டது.

ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன என தமிழ் பிரதிநிதிகள் இதன்போது விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget