குறித்த மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட நீண்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
தமது முதலாவது மற்றும் இரண்டாவது தடவைகளுக்காக 2026 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு சில மாணவர்களினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி பரீட்சைக்குத் தோற்றவுள்ள மனுதாரர்கள், பரீட்சையை ஒத்திவைப்பது அவசியமானது எனக் கூறி, அதனைத் தாமதப்படுத்துவதற்காக நீதிமன்றத் தலையீட்டைக் கோரியிருந்தனர்.
எனினும், இம்மனுவின் சட்டப்பூர்வத் தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் நிலையைச் சவாலுக்கு உட்படுத்திப் சட்டமா அதிபர் ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
இருதரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனுவை நிராகரித்தது. இதன் மூலம் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment