Ads (728x90)

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காலிமுகத்திடல் ‘அரகலய’  போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நளின் பிரியந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சமூகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget