Ads (728x90)

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் பணிமீறல் காரணமாக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். 

இது குறித்து அந்த அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இந்த கட்டாய விடுமுறைக் காலத்தில் அதிகாரசபையின் அலுவலகம் அல்லது பணித்தளங்களுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தலைவரின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொது முகாமையாளர் நிறுவனக் கோவை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஒழுக்க நெறிமுறைகளை மீறி பல கடுமையான துஷ்பிரயோகங்களைச் செய்துள்ளமை முதற்கட்டமாக வெளிப்பட்டுள்ளமையே இத்தீர்மானத்திற்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Post a Comment

Recent News

Recent Posts Widget